• Oct 26 2024

நாங்க எல்லாம் தினக்கூலி தானே.. செருப்பால் அடித்த மாதிரி ரோகிணிக்கு பதிலடி கொடுத்த மீனா..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பத்துடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மருத்துவமனையில் கிரிஷையும் அவருடைய பாட்டியையும் பார்த்துக்கொண்டு முத்து மற்றும் மீனா வெளியே வருகின்றனர்.

அப்போது ரோகிணி அவர்களை சந்தித்தபோது ’நீங்கள் இன்னும் செல்லவில்லையா, உங்களுக்கு வேலை இருக்கும், வீட்டுக்கு போங்கள்’ என்று ரோகிணி கூறிய போது மீனா அதற்கு ’நாங்கள் தின கூலிங்க தானே, வேலை கிடைக்கிறப்ப பார்க்கலாம், ஆனால் நீங்கள் அப்படி இல்லை, முதலாளி, ஒரு நாள் வேலை இல்லை என்றால் கூட உங்களுக்கு நஷ்டமாகும், அதனால் நீங்கள் வீட்டுக்கு போங்க’ என்று செருப்பால் அடுத்த மாதிரி பதில் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோகிணி ’சரி நான் போகிறேன்’ என்று கூறுகிறார்.

இதையடுத்து கிரிஷ்  மற்றும் அவருடைய பாட்டியை மீனாவும் முத்துவும் வீட்டிற்கு அழைத்து வந்த போது விஜயா அதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கிறார். ’இங்கே இருக்கிறவங்களுக்கே இடமில்லை, இவங்கள வேற கூட்டிட்டு வந்துட்டாங்க’ என்று அவர் மீனாவையும் முத்துவையும் திட்டியபோது அவரை அண்ணாமலை சமாதானப்படுத்துகிறார்.



அப்போது ஆச்சரியமாக மனோஜூம், ‘நான் ரோகிணியை தேடி சென்றபோது இவங்க தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், அதனால் அவங்க ரெண்டு நாள் இங்கே இருக்கட்டும்’ என்று கூற, ரவியும் அதையே கூறுகிறார். அதன் பிறகு ’இங்கே ரூம் இல்லையே’ என்று விஜயா கூறிய போது ரோகிணி ’எங்கள் அறையில் தங்கட்டும்’ என்று கூற முத்து - மீனா கூட ஆச்சரியமாக அவரை பார்க்கின்றனர்.

இதனை அடுத்து ரோகிணி இடம் வரும் விஜயா ’நீ என்ன செய்வியோ தெரியாது, இவங்களை நாளைக்குள் வெளியேற்ற வேண்டும், நீ தான் அதற்கு பொறுப்பு என்று கூறி அந்த குழந்தை எப்படி பிறந்ததோ என்று கூற ரோகிணி ஆத்திரமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

கிரிஷ் மற்றும் அவருடைய பாட்டி, அண்ணாமலை வீட்டில் தங்குவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அடுத்த வாரம் தான் தெரிந்து கொள்ள முடியும்.

Advertisement