பல்துறை திறமை கொண்ட இந்திய நடிகர் மன்சூர் அலி கான், தற்போது தனது புதிய இசை ஆல்பம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தென்னிந்திய திரைப்படங்களின் உலகில் எதிர் நாயகனாகவும், துணை நடிகராகவும் பிரபலமான இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஓர் தனிச்சிறப்பை ஏற்படுத்தியவர்.
ஆர். கே. செல்வமணி இயக்கிய 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் இவருக்கு திரையுலகில் பெரும் வெற்றியைத் தந்தது. அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த மன்சூர் அலி கான், 2024 பிப்ரவரியில் 'இந்திய ஜனநாயகப் புலிகள்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்பத்தில் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பாடல்களில், அவர் தான் இசையமைத்து, பாடி, நடித்து, இயக்கியும் உள்ளார். ஒரு முழுமையான கலைஞராக தனது பலதிறமைகளையும் இந்த இசை ஆல்பம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அகம் பிரம்மாஸ்மி ஆல்பம் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.
Listen News!