• Apr 07 2026

அரசியலில் அதிரடி என்ட்ரி! விஜய் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்.. – சுந்தர்.C பகீர்.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.C சமீபத்தில் அரசியலில் அறிமுகமாகியுள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதன்முறையாக அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ளதாக கூறிய அவர், மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, விஜய் மற்றும் அவரது அரசியல் முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “தவெக பற்றியும் விஜய் பற்றியும் நான் விமர்சிக்க மாட்டேன்.” என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இந்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அவரது இந்த நிலைப்பாடு, அரசியலில் நேர்மையான மற்றும் மரியாதையான அணுகுமுறையை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக அரசியல் களத்தில் விமர்சனங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், சுந்தர்.சி எடுத்துள்ள இந்த முடிவு வேறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சினிமாவில் வெற்றி கண்ட சுந்தர்.சி, அரசியலிலும் தனது பயணத்தை எப்படி முன்னெடுப்பார் என்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அவரது இந்த புதிய முயற்சி எதிர்காலத்தில் எந்த மாற்றங்களை கொண்டு வரும் என்பது பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.

Advertisement

Advertisement