• Apr 17 2025

பத்திரிகையாளர்கள் மைக்கை பறித்த விஜய் ஆண்டனி! நான் யாருக்கு ஓட்டுபோடேனு சொல்லனுமா?

Nithushan / 11 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் தலைப்பு செய்தியாக இருக்கும் மக்களவை தேர்தல் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று வாக்களிக்கும் நிலையில் விஜய் ஆண்டனியும் வாக்களிக்க சென்றுள்ளார்.


மக்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சினிமா பிரபலங்கள் வாக்களித்து விட்டு மீடியா  முன்னணிலையில் சில வார்த்தைகளும் கூறுவர். அவ்வாறே நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வாக்களித்துவிட்டு மீடியா முன்னிலையில் செய்த செயல் வைரலாகின்றது.


வாக்களித்து விட்டு வெளியே வந்த விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்களின் மைக்குகளை  பறித்துள்ளார். அதாவது மிகவும் நகைச்சுவையாக செயற்றப்பட்ட அவர் மைக்குகளை வாங்கி  "விடுங்கள் நானே பிடிக்குறேன் உங்களுக்கு என் கஷ்டம்" என்று நகைச்சுவையாக செய்துள்ளார். மற்றும் நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று சொல்ல வேண்டுமா? என நகைச்சுவையாகவும் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அனைவரும் வாக்களியுங்கள் என கோரிக்கையும் விடுத்துள்ளார். 

Advertisement

Advertisement