தமிழ் சினிமாவின் நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'ஜாம்பி', 'சில நொடிகளில்' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் விபத்தில் சிக்கி சுகமடைந்து மீண்டும் திரைப்பயணத்தை தொடங்கிய யாஷிகா, தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. மயில் நிறம் கொண்ட அழகிய உடையில் மின்சாரத்தை போல மின்னும் யாஷிகா, மயில் போன்று போஸ் கொடுப்பதன் மூலம் இணையவாசிகள் மனதை கவர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சிலர் “பக்கா மாடர்ன் மயில் போல இருக்கீங்க!” என கமெண்ட் செய்ய, மற்றோர் தரப்பினர் “மீண்டும் முழு லெவலில் கம்பேக் கொடுக்குறீங்க!” என புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!