தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பரிச்சயமானவர் நடிகர் ரவி மோகன். பல தளங்களில் தனது சிறந்த நடிப்பால் பாராட்டுகளை பெற்றவர், தற்போது தனது படைப்புலக பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
தனது பெயரை மையமாகக் கொண்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் ரவி மோகன். தற்போது அந்த நிறுவனத்தின் லோகோவை அதிகாரபூர்வமாக வெளியிட்டு, விரைவில் இந்த நிறுவனத்தின் கீழ் படங்களைத் தயாரிக்கவிருக்கின்றேன் என உறுதியாக அறிவித்துள்ளார்.
தனது புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு “Ravi Mohan Studios” எனப் பெயரிட்டுள்ளார். இந்தப் பெயர் மற்றும் லோகோவுக்குப் பின்னால், “எனது வாழ்க்கையையே சினிமா அமைத்தது. எனவே என் பெயரிலேயே இந்த பயணத்தைத் தொடங்க விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!