தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த படம் என்றால், அது 'துருவ நட்சத்திரம்' தான். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த படம், 2018ல் அறிவிக்கப்பட்டபோதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக படத்தின் ரிலீஸ் தாமதமாகியிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சிம்ரன், படத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 'துருவ நட்சத்திரம்' ஒரு ஆக்ஷன் திரில்லர் கொண்ட படமாக அமைந்துள்ளளது. இது ஒரு இன்டர்நேஷனல் ஸ்டைல் கதைக்களம் கொண்ட படம்.
விக்ரம் இப்படத்தில் ஒரு ரகசிய உளவுத்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அவருடைய ஸ்டைல், ஆக்ஷன், முகபாவனைகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளன. படத்தில் விக்ரம் கதாநாயகனாக இருப்பதுடன், ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன், பார்த்திபன் , சிம்ரன் ,அருந்ததி நாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்திய பேட்டியில் சிம்ரன், "துருவ நட்சத்திரம் ஒரு முழுமையான ஆக்ஷன் படம். ஸ்டைலான படமும் கூட. அந்தப் படத்தின் ரிலீஸுக்காக நாங்களும் மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறோம். படம் நிச்சயமாக சரியான நேரத்தில் வெளியாகும். மக்கள் நிச்சயமாக இப்படத்தை விரும்புவார்கள்." எனக் கூறியுள்ளார். இத்தகவல் ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!