தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் படைப்பாளர் பார்த்திபன் இன்று மாலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் செய்துள்ள குறிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!" எனப் பதிவு செய்துள்ள பார்த்திபன், இது வழக்கமான சினிமா அறிவிப்பல்ல என்பது போல் நுணுக்கமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இந்த பதிவுக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் பலர் “இது பார்த்திபன் அரசியலுக்கு வருகிறாரா?” எனக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு சமூகவியல் கருத்துகள் மற்றும் தன்னிகரற்ற திரைப்படக் காட்சிகள் மூலம் பலரது மனதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியவர் பார்த்திபன், அரசியல் களத்தில் கால்பதிக்கப்போவதாக இருந்தால் அது பெரும் மாற்றத்தை உருவாக்கும் எனப் பலரும் நம்புகின்றனர்.
இன்று மாலை 4.46க்கு அவர் வெளியிட உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்தடுத்த மேடைகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றன. அறிவிப்பு வெளியானவுடன் அதற்கான முழு விவரங்களும் எங்கள் தளத்தில் அப்டேட் செய்யப்படும்.
Listen News!