தமிழ் சினிமாவில் மனிதர்களின் உணர்வுகளை இயக்கத் தெரிந்த இயக்குநர்களில் ஒருவராக சேரன் காணப்படுகின்றார். அவரது படங்கள் எதுவாக இருந்தாலும், அதில் ஒரு தாய்பாசம், குடும்ப பாசம் மற்றும் மக்களின் உணர்ச்சி நுணுக்கம் எப்போதும் நன்கு பதியப்பட்டிருக்கும். ஆனால், இத்தனை ஆழமான படைப்புகளைத் தந்த அந்த இயக்குநர் இன்று எங்கு இருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு தெரியாத நிலை உருவாகியுள்ளது.
அத்தகைய இயக்குநர் குறித்து சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் சுபேர் சேரன் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதன்போது, "சேரன் கடந்த காலங்களில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களில் சிக்கினார். தனது கடன்களை அடைக்கப் பல முன்னணி ஹீரோக்களை நாடியதுடன் சிலர் ஆதரவு கொடுக்கவில்லை. மேலும், சேரனின் பெயரில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவியது." எனவும் தெரிவித்திருந்தார்.
சேரன் முதலாவதாக இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’ என்ற படம் சாதி, மத ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு கூச்சமில்லாத தாக்கம் கொடுத்தது. தமிழ் சினிமாவின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, அந்த படத்துக்காக “சாதிவெறிக்கு சம்மட்டி அடி” என எழுதிய கடிதம், நாளடைவில் சிறந்த வரலாற்று பதிவாகவே மாறியது எனப் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
பார்த்திபனும், தயாரிப்பாளரும் பாரதி கண்ணம்மாவின் கிளைமாக்ஸை மாற்ற சொல்லிய போதும், சேரன் தனது உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. "ஒரு படம் முதலில் எப்படி முடிகிறது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும்", என்ற உன்னத எண்ணத்துடன் அந்த கிளைமாக்ஸை வைத்திருந்தார் சேரன் அதுதான் படத்தின் வெற்றிக்கு ரகசியம் என்றும் கூறியிருந்தார் சுபேர்.
அத்துடன் பல ஹீரோக்கள் தயங்கிய பிறகு, சேரனே 'ஆட்டோகிராப்' படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். ஆனால் சில தயாரிப்புகள் வருமானம் தரவில்லை, எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை, இதனால் சேரன் கடனில் சிக்கிக்கொண்டார். அத்துடன் கடன் பிரச்சனையை தீர்க்கவே பிக்பாஸிற்குள் சேர்ந்ததாகவும் சுபேர் தெரிவித்திருந்தார்.
Listen News!