தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த ஒரு பெரிய செய்தி தற்போது நிறைவேறியுள்ளது. தமிழ் திரையுலகின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். சமீப காலங்களில் தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நெல்சன், இந்த மாபெரும் கூட்டணியை இயக்கவிருக்கிறார் என்பதால் இந்த திட்டம் குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பேசத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அனிருத், இந்த பெரிய கூட்டணிக்காக இசையமைக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இவ்வாறு இருக்கையில், ரஜினிகாந்தின் மனைவி லதா கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர் இதுகுறித்து, “ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பது எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் மொமெண்ட். இந்த முயற்சி தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். அதே சமயம் இது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைவது என்பது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான தருணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!