இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளர். இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கின்றார் . தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இவர் தனது வாழ்வில் ஏற்படட பல பிரச்சனைகள் , வலிகள் , சர்ச்சைகள் எனப் பலவற்றை கடந்து இந்த சினிமாத்துறையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கின்றார். மேலும் இவர் தற்போது தயாரிப்பளராகவும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். "சுபம்" என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.
தற்போது இவர் அனந்தராவின் கஸ்ர் அல் சரப் பாலைவன ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் இன்றும் அங்கு இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் நீச்சல் உடையில் இருப்பது போன்றும் , டெலஸ்கோப் வழியாக வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் "நட்சத்திரங்களை அடைதல்" என்ற பதிவினையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!