• Oct 26 2024

குக் வித் கோமாளி 5 செட்டுக்கு வந்த ஸ்பெஷல் போலீஸ்..! அதிரடியான சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. சமையல் நிகழ்ச்சியோடு கலாட்டாவாக இடம்பெறும் இந்த நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் கணக்கானோர் ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் மற்றும் குக்குகள் மிகவும் ஜாலியாக அலப்பறை செய்வதோடு நடுவர்களும் அவர்களுக்கு போதிய சுதந்திரத்தை கொடுத்து தீர்க்கமான தீர்ப்பையும் வழங்கி வருகின்றார்கள்.

ஏப்ரல் 17ஆம் தேதி ஆரம்பமான குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது வரையில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த சீசனில் இறுதியாக நடந்த எபிசோட்டில், மலையாள நடிகையான ஷாலினி ஜோயா எலிமினேட் ஆகியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்து இருந்தது.

இந்த நிலையில்,  இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஸ்பெஷல் போலீசாக மீண்டும் குக் வித் கோமாளி 5 செட்டிற்கு வருகின்றார் ஷாலினி சோயா.

ஷாலினி சோயாவை பார்த்ததும் போட்டியாளர்கள் மற்றும் குக்குகள் ஆர்ப்பரித்துக் கொண்ட ப்ரோமோ தற்போது வெளியாகிய ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Advertisement