• Oct 26 2024

டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி  ரசிகர்களை மிரட்டிய திரைப்படம் தான் டிமான்டி காலனி. இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானலில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. அதில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், ஹரி, பசுபதி உள்ளிட்டோர் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. தங்கலான் படமும் அன்றைய நாளில் வெளியான போதிலும் இந்த படத்திற்கு அடுத்தபடியாக டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.


கடந்த இரு நாட்களில் மட்டும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் 10 கோடிக்கு மேலான சர்வதேச பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை அருள்நிதி, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

Advertisement