தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து அசத்திய நடிகை பிரகதி தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது தமிழ் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
முதல் படம் பாக்யராஜ் சாருடன் நடித்தேன் அவர் ரொம்ப சத்தமில்லாமல் திட்டுவார். அடுத்து விஜயகாந்த் சார் வீட்ல சொல்லி தான் அனுப்புனாங்க அவர் பெரிய ஹீரோ அமைதியா இருக்கனும் சிரிக்க கூடாதுன்னு அதேமாதிரி நானும் அமைதியா இருந்தன் ஆன அவர் வந்து என்ன பயமுறுத்திட்டே இருப்பார் சாப்பிட்டியா என்ன சாப்பிட்டா என கேட்பார் நான் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாவே இருப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் ஒரு படம் அந்த படத்தில என்ன ரொம்ப அசிங்கப்படுத்தினாங்க அந்த ஒரு படத்தில இருந்து தமிழ் சினிமாவையே விட்டு விலகினேன். தயாரிப்பாளர் ஹீரோ இருவரும் ஒரே ஆட்கள் தான் அந்த படத்தில் so இவங்க இயக்குநர் எல்லாரும் சேர்ந்து public முன்னாடி அசிங்கப்படுத்தினாங்க என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
Listen News!