• Jun 06 2025

விஷால் மீது வழக்கு பதிவு செய்த லைகா நிறுவனம்..!உயர்நீதிமன்றம் வெளியிட்டஅதிரடி உத்தரவு...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி  நடிகராக வலம்  வருபவர் நடிகர் விஷால்.  இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் இவர் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளது. இச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


"மத கஜ ராஜா" திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் திருமனம் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியும்  வைக்கும் விதமாக நடிகையும் தோழியுமான சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் மீது "லைகா நிறுவனம் வழக்கு பதிவு" செய்துள்ளது இத்  தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது. 


இதனைத்தொடர்ந்து தற்போது நீதி மன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது நடிகர் விஷால் "லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்"  எனக்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement