• Jun 06 2025

காலில் காயத்துடன் நிலைகுலைந்து நிற்கும் பிரியங்கா..! நடந்தது என்ன.?

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் பிரபல்யமான முகமாக கடந்த பத்து ஆண்டுகளாக ரசிகர்களிடம் பாசத்தையும் புகழையும் பெற்று வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது மீண்டும் இணையத்தில் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளார். சூப்பர் சிங்கர் மற்றும் Start Music போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா, கடந்த மாதம் திடீரென தனது திருமணத்தை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார்.


பெரிதாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், “எங்கள் திருமணம் எளிமையாக முடிந்தது” எனக் கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணவர் DJ வசி உடன் இணைந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதனால் அவரைப் பின்தொடரும் ரசிகர்கள், “இது எப்புடி திடீரென நடந்தது.?” என்ற நிலைக்குச் சென்றனர்.

இதன் பின்னர், அவருடைய திருமணம் தொடர்பாக பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தன. இதற்கு எதிராகவே, பிரியங்கா சில தினங்களுக்கு முன்பு "உங்க வாய் உங்க உருட்டு" என்ற ஹாஸ்டாக்குடன் வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.


இந்த நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காலில் அடிபட்ட காயத்துடன் ஒரு செல்ஃபி புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. இதில் அவரது இடது கால் பகுதியில் மோசமான வீக்கம் தென்படுகிறது. அந்த போட்டோவுடன் “Fracture said Pause, I said POSE" என்ற பதிவினையும் பகிர்ந்துள்ளார். பிரியங்காவின் இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் உடல்நிலை குறித்து கவலைப்படத் தொடங்கினர். 



Advertisement

Advertisement