தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை வழங்கிய இயக்குநர் விடுதலை 2 திரைப்படத்தின் பின்னர் தற்போது சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகின்றார். இந்த படம் வடசென்னை படத்தின் சாயலில் உருவாகுவதால் தனுஷிடம் அனுமதி கேட்பதற்காக வெற்றிமாறன் சென்றபோது அவரிடம் ஓகே சொல்லி அனுப்பிவிட்டு தொலைபேசியில் எடுத்து பேரம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தின் சாயலில் எடுப்பதால் தனக்கு 20 கோடி தரவேண்டும் என கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் வதந்தி என்றும் தனுஷ் வெற்றிமாறன் சந்திப்பு இடம்பெறவில்லை என தனுஷ் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அவர் படத்தின் கதையை மீண்டும் மாற்றி எழுதி வருவதாகவும் குறிப்பிடப்படுள்ளது. மேலும் promo காட்சிகளிலும் ஒரு சில பகுதிகள் மாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
Listen News!