• Jun 07 2025

துபாய் தயாரிப்பாளருடன் இணையும் "டிராகன் " பட இயக்குநர்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய டிராகன் படம் திரையரங்குகளில் அபூர்வ வெற்றியை பெற்றதை தொடர்ந்து இவர் அடுத்து சிம்புவை வைத்து சிம்புவின் 50 ஆவது படத்தினை இயக்கவுள்ளார். டிராகன் பட வெற்றியினை கொண்டாடுவதற்காக இயக்குநர் துபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் அங்கு future musium சென்று ரோபோ ஒன்றுடன் உரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ரோபோ இயக்குநரிடம் டிராகன் படத்தின் வசூலினினை சரியாக கூறியுள்ளதுடன் அதுமட்டுமல்லாமல் கண்ணன் ரவியின் ரெஸ்டாரெண்டுக்கும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


அங்கு அவருடன் அடுத்த பட தயாரிப்பு குறித்து நீண்ட உரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அநேகமாக அடுத்து இந்த கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மற்றும் சிம்புவின் படத்தினை முடித்து மீண்டும் அஷ்வத் மாரிமுத்து பிரதீப் கூட்டணி சேருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement