தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றி மாறன் இவர் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது திரைப்படத்திற்கென்றோ தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். தற்போது "மனுசி" திரைப்படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"பொல்லாதவன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக்கியாவர். தனது எதார்த்தமான முறையில் படத்தினை எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இவர். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் 1, 2 திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார் என்று கூறமுடியும். மேலும் இவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது .
இந்த நிலையில் தற்போது "மனுசி" திரைபடத்தை தயாரித்து வரும் இவர் தற்போது நீதி மன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இப் படத்தில் இடம் பெறும் காட்சிகள் குறித்தும் வசன அமைப்பு குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!