• Jul 07 2025

ரிஷப் ஷெட்டிக்கு பிறந்த நாள் பரிசாக ரசிகர்கள் சர்ப்ரைஸ்...!காந்தாரா 2 போஸ்டர் வெளியீடு..!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகாராகவும் , இயக்குநர் என  பன்முகத் திறமையாளராக வலம் வருகின்றார் ரிஷப் ஷெட்டி. இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சிறப்புநாளில், அவர் நடித்தும் இயக்கியும் வெற்றிகரமாக திரையரங்குகளைப் பெருமைப்படுத்திய ‘காந்தாரா 2 ’ படக்குழுவும், அவருக்கு மரியாதையாக ஒரு சிறப்பு பிறந்த நாள் போஸ்டரை வெளியிட்டது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படம், தெற்கிந்திய திரையுலகில் மட்டுமல்லாது, இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், பாரம்பரிய  மற்றும் சமூகநல விழிப்புணர்வுகளை கலந்த ஒரு பரபரப்பான படைப்பை உருவாக்கினார். மேலும்  ‘காந்தாரா 2 திரைப்படம் பல விதமான பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் மத்தியில் தயாராகி வருகின்றது. 


மேலும் "காந்தாரா 2 " படக்குழுவின் இந்த புதிய போஸ்டர், ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரமான சிவாவின் இனிமையான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. பசுமை வனப்பகுதியில், பரம்பரிய வேஷத்தில் அவர் கையிலே கொழுந்து பிடித்தபடி அமைந்திருக்கும் இந்தக் காட்சியில், அவரது ஆன்மீக ஒளி மற்றும் வீர சாகசம் தெளிவாகக் காணப்படுகிறது. 


போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர் கூறியதாவது. "ரிஷப் ஷெட்டி போன்ற சினிமா கலைஞரைத் திரையுலகம் பெறுவதால், இது நமக்கெல்லாம் ஒரு பரிசு. அவரின் பிறந்த நாளில், 'காந்தாரா 2 ' படத்தின் மூலம் அவர் காட்டிய கலை நுட்பத்தை மீண்டும் நம் நினைவில் எடுத்துவரும் வகையில் இந்த சிறப்பு போஸ்டரை வழங்குகிறோம். இனி வரும் காலங்களிலும் அவர் மேலும் உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்." தெரிவித்து இருந்தனர். 

"காந்தாரா 2" முதல் பாகம் வெற்றி அடைந்தது போலவே இந்த பாகமும்  வெற்றியடைவும்  அவர் தேசிய அளவில் புகழ் பெற்ற வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும்  அவரது அடுத்த படைப்புகள் குறித்த எதிர்பார்ப்பு பெருகிய நிலையில், அவரின் பிறந்த நாளில் இந்த சிறப்பு போஸ்டர், ரசிகர்களுக்குள் உற்சாகத்தை இருமடங்காக்கியுள்ளது என்றுதான் கூற முடியும்.




Advertisement

Advertisement