• Apr 26 2026

ஸ்ருதிக்காக அடிதடியில் இறங்கிய முத்து.. வாசுதேவனுக்கு பலத்த பதிலடி! சிறகடிக்க ஆசையில் எதிர்பார்த்த திருப்பம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஸ்ருதி தனியாக வரும் போது நபரொருவர் அவரை வழிமறித்து தகராறு செய்ய, அங்கு வந்த முத்து அவரை அடித்து ஸ்ருதியை காப்பாற்றுகிறார்.

மேலும், என் மேல எவ்வளவு என்டாலும் கோபபட்டுக்கோ, ஆனா என் தம்பிய தண்டிக்காத. அவன் பாவம். நீ வந்தா தான் வீட்டுக்கு வருவன் என இருக்கான் என ஸ்ருதியிடம் சொல்கிறார்.


இதைக் கேட்டு அமைதியாக இருந்த ஸ்ருதி, வீட்டுக்கு வந்து முத்து இல்லாட்டி விச்சு என்ன எதாவது பண்ணி இருப்பான் என சொல்ல, அதுவும் முத்து வேலையா தான் இருக்கும் என வாசுதேவன் சொல்கிறார்.


அதற்கு ஸ்டாபிட் அச்சா. அன்னைக்கு நீங்க தான் மீனாவ தேவ இல்லாம பேசி இருக்கீங்க. அந்த வீட்டுல எல்லாரும் என்ன எப்படி பாக்குறாங்க தெரியுமா? என் தப்பு தான் இங்க வந்து இருக்க கூடாது. நான் கிளம்புறேன் என சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதியின் பெற்றோர் ஷாக் ஆகி நிற்கிறார்கள்.

சிறகடிக்க ஆசையில் எப்போது ஸ்ருதியும் முத்துவும் சேருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான கதைக்களம் உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement