• Oct 26 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் புதிதாக சூப்பர் சிங்கர் போட்டி! வெந்துபோன விஜயா முகம்!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், எல்லாரும் ரொம்ப களைப்பில் மாலை கட்டிக் கொண்டு இருக்க, அதை விறுவிறுப்பாக்க எல்லாரும் ஒரு ஒரு பாடலாக பாடுகிறார்கள். அதன்படி அங்கிருந்த எல்லாரும் ஒவ்வொரு பாடலை பாடி கலகலப்பாக இருக்கிறார்கள். இதை பார்த்து பார்வதி கண் கலங்குகிறார். மேலும் விஜயா உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து ஸ்ருதியை போய் தூங்குமாறு விஜயா சொல்ல, இல்ல எனக்கு ஜாலியா இருக்கு. நான் இவங்க கூட இருக்கன் என சொல்ல, இவங்க 500 மாலையை கட்டி முடிக்க மாட்டாங்க என விஜயா சொல்கிறார். அதற்கு மீனா, நாங்க நிச்சியம் கட்டி முடிப்போம் என சொல்கிறார்.


இதையடுத்து, ஸ்ருதியும் ரவியும் குல்ஃபீ ஐஸ் வாங்கி கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுக்கிறார்கள். ஆனால் மீனா வேணாம், வேலை இருக்கு என சொல்ல, முத்து அதை வாங்கி ஊட்டி விடுகிறார்.

இதை பார்த்து விஜயா கோவத்தில் உள்ளே எழுந்து செல்ல, பார்வதியையும் ரூமுக்குள் கூட்டி செல்கிறார்.  அவங்களை பார்த்தா எனக்கு என் புருஷன் நினைவு வருது என கண் கலங்குகிறார் பார்வதி.

மேலும், வேலை எல்லாம் எப்படி போகுது என முத்துவின் நண்பர் போன் போட்டு கேக்க, எல்லாம் பரபரப்பா போயிட்டு இருக்கு. விடிய ஷார்ப்பா வந்துடும் என சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement