• Jun 25 2025

நிதீஷால என்ர வாழ்க்கையே போச்சு! கண்ணீரில் இனியா... செய்வதறியாது தவிக்கும் கோபி.!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா தன்ர பிறந்தநாள் கேக்கை வெட்டி எல்லாருக்கும் கொடுத்து சந்தோசமாக கொண்டாடுறார். இதனை அடுத்து பாக்கியா இனியாவோட dress ஐப் பாத்து இது உனக்கு ரொம்ப சூப்பரா இருக்கு என்று சொல்லுறார். மேலும் ஏன் நீ இண்டைக்கு டல்லா இருக்கிறா என்று இனியாவைப் பாத்துக் கேட்கிறார். அதுக்கு இனியா officeல கொஞ்சம் வேலை அவ்வளவு தான் என்கிறார்.


இதனை அடுத்து எழில் தனக்கு flightக்கு நேரம் ஆகிட்டு என்று அங்கிருந்து கிளம்புறார். பின் பாக்கியாவும் எங்களுக்கும் நேரம் ஆகிட்டு நாங்களும் போறோம் என்கிறார். அதைத் தொடர்ந்து இனியா கோபியைப் பாத்து ரெண்டு பேரும் வெளியில போவமா என்று கேட்கிறார்.  அதுக்கு கோபி இங்க ஆட்கள் எல்லாம் நிக்கினம் சம்மந்தி தப்பா நினைப்பாங்க என்று சொல்லுறார். 

பின் ரெண்டு பேரும் வெளியில போய் நிக்கினம். அப்ப இனியா கோபியைப் பாத்து கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க நிதீஷ் பற்றி விசாரிக்கலையா என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோபி ஏன் நிதீஷ் ஆகாஷ் விசயத்தைக் கதைச்சு உன்ன கவலைப்படுத்துறானோ என்கிறார். பின் இனியா நிதீஷ் நல்லவர் இல்ல அவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று சொல்லுறார். அதைக் கேட்டு கோபி ஷாக் ஆகுறார்.


இதனை அடுத்து இனியா நியூஸில நிதீஷ் பற்றி வந்த செய்தியை கோபிக்கு காட்டுறார். பின் இனியா இப்புடி ஒருத்தன எனக்கு கல்யாணம் பண்ணிவைச்சு என்ர சந்தோஷத்தையே இல்லாமல் செய்திட்டீங்களே என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி என்னை மன்னிச்சிரு என்கிறார். பின் கோபி சுதாகர்  வீட்ட போய் இதைப் பற்றி கேட்கிறார். இதனை அடுத்து இனியாவ அங்க இருக்க வேணாம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement