• Jun 25 2025

முத்துவின் கேள்விக்கு மெளனமாக இருந்த சீதா.! சமாதானப்படுத்தும் மீனா.. கோபத்தில் ரோகிணி!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சத்தியா வீட்ட சாப்பிட வந்தவர் முத்துவைப் பாத்து இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வீட்டில ஒத்துக்கல என்றால் உடனே லவ் பண்ணுற பையனைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போகினம் என்று சொல்லுறார். அதுக்கு முத்து வேற பொண்ணுங்க எப்புடியோ எனக்குத் தெரியாது என்ர வீட்டுப் பொண்ணு அப்புடி எல்லாம் இல்ல என்கிறார். மேலும் எங்க வீட்டுப் பொண்ணு எப்பவுமே இப்புடி ஒரு காரியத்தைப் பண்ணாது என்று சொல்லுறார்.


இதனை அடுத்து முத்து சீதாவைக் கூப்பிட்டு நான் பாக்கிற மாப்பிள்ளையைத் தானே நீ கல்யாணம் பண்ணிப்ப என்று கேட்கிறார். அதுக்கு சீதா எதுவுமே கதைக்காமல் அழுதுகொண்டிருக்கிறார். பின் மீனா முத்துவைப் பாத்து ஒருத்தங்களுக்கு தேவையான வாழ்க்கையை அவங்களே அமைச்சுக் கொள்ளுவாங்க நாங்க தடையாக இல்லாமல் இருந்தால் காணும் என்று சொல்லுறார்.

அதுக்கு முத்து சீதா கூட என்னோட பேச்சைக் கேட்கிறாள் நீ தான் கேட்காமல் இருக்கிற என்கிறார். பின் சீதா மீனாவப் பாத்து எனக்கு மாமவைப் பாக்க பயமா இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து ரோகிணி சிற்றி வீட்ட போய் தன்னோட காசை திருப்பித் தரச்சொல்லுறார். மேலும் திருட்டு நகையை என்கிட்ட கொடுத்து எனக்கு புதுப் பிரச்சனையை கொண்டு வந்து கொடுத்திட்ட என்கிறார்.


அதுக்கு சிற்றி பொருளைக் கொடுங்க பணத்த தாறேன் என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து மீனா சீதாவோட register கல்யாண போட்டோவை பாத்துக் கொண்டிருக்கிறார். பின் முத்து வந்து மீனாவோட போனை எடுக்கிறதப் பார்த்த மீனா ரொம்பவே கோபப்படுறார். அதைப் பார்த்த முத்து நீ இப்பவெல்லாம் வித்தியாசமா நடந்து கொள்ளுற என்று சொல்லுறார். இதனை அடுத்து ரோகிணி மனோஜுடன் விஜயா பற்றிக் கதைச்சு சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement