• Oct 26 2024

பூமர் மாமியாருக்கு தரமான பல்பு கொடுத்த பாக்கியா! ராதிகா வீட்டில் பூகம்பம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஈஷ்வரி ராமமூர்த்தியிடம் ஒன்று கேக்கணும் என சொல்ல, நானும் ஒன்று சொல்லணும் என்று சொல்ல, முதலில் எல்லா விஷயமும் தெரிஞ்சி என் கிட்டு ஏன் என்னட சொல்ல இல்லை என்று ராமமூர்த்தி கேக்கிறார். பிறகு என்கிட்ட கோபி வந்து அழுகிறான். அவன் தப்பான முடிவு ஏதும் எடுத்துடுவான் அதனால நானும் அவன் கூட போறேன் என்று சொல்லுகிறார் ஈஷ்வரி. அதற்கு ராமமூர்த்தி போக வேண்டாம் என்று சொல்லாமல், உனக்கு பட்டா தான் தெரியும் என்று சொல்லி செல்கிறார்.

இதை தொடர்ந்து கோபியும் ராதிகாவும் பெட்டியுடன் வர, எல்லாரும் நிற்கிறார்கள். அதன்பிறகுகோபு  அம்மாவை கூப்பிட, நாங்க சொல்லுகிறோம் நீங்க கிளம்புங்க என எழில் சொல்லுகிறார். இதன்போது ஈஸ்வரியும் பெட்டியுடன் வருகிறார். இனியா,  செழியன், எழில் அவரை தடுக்கும் போதும், ராமமூர்த்தி அவர் போகட்டும், நீங்க அமைதியா இருங்க என்று சொல்லுகிறார். ஆனாலும் அவர்கள் இங்கையே  இருக்குமாறு கெஞ்சுகிறார்கள்.


எனினும், அவர்களை விடுமாறு சொல்லி ஈஸ்வரியை கோபி அழைத்துக் கொண்டு செல்கிறார். அவர்கள் வாசலுக்கு போகும் போது அங்கு பாக்கியா வருகிறார். அவரிடம் உனக்கு மூன்று பசங்க இருகாங்க, நான் என் பிள்ளை கூட இருக்கனும் என்று பாக்கியாவிடம் ஈஸ்வரி சொல்ல, நான் எதுவுமே சொல்ல இல்லையே என்று பல்பு கொடுக்கிறார் பாக்கியா.

இதனால் கோவப்பட்ட ஈஸ்வரி அப்போ நான் எப்ப போவன் என்று இருந்தியா என்று பேசிவிட்டு கோபத்துடன் கோபியுடன் செல்கிறார்.

இதையடுத்து ராதிகா அவரின் வீட்டுக்கு செல்ல, மையூ அவரை பார்த்து சந்தோசப்படுகிறார். ராதிகாவின் அம்மா கோபியுடன் ஈஸ்வரியும் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement