• Apr 15 2025

சிறகடிக்க ஆசை: ரோகிணியின் உண்மையான மகன் யார் தெரியுமா? வெளியானது புகைப்படங்கள்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ட்ரெண்டிங் நாடக தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை ஆகும். அதிக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபடும் இந்த சீரியல் தொடரே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் TRP ரேட் அதிகமாக இருக்கும் நாடகம் ஆகும். இதில் வரும் ரோகிணி கதாபாத்திரத்தின் மகன் மற்றும் கணவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குறித்த நாடக தொடரில் பிரபல நடிகர் சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் இதில் கதாநாயகனாக இருக்கும் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிப்பதோடு ஹீரோயினான  மீனா கதாபாத்தில் கோமதி பிரியாவும் நடிக்கின்றார். இந்த நிலையிலேயே இதில் ரோகிணியின் சில புகைப்படம் வெளியாகியுள்ளது.


சல்மா அருண் என்பவர் நடிக்கும் கதாபாத்திரமே ரோகிணி ஆகும். முத்துவின் அண்ணியாக வரும் இவர் குறித்த சீரியலின் பின்பே பிரபலமானார் எனலாம். இதற்கு முன்பே பல சீரியல்களில் உதாரணமாக  ராஜா ராணி , பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் சிறகடிக்க ஆசை நாடகத்தின் பின் பிரபலமாகி உள்ளார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

  


Advertisement

Advertisement