• Apr 08 2025

நாங்க சொன்னது இத்தன பேரு ஆனா வந்தது ? ரோபோ சங்கர் வீட்டு ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தன கோடி செலவா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி  காமெடியனாக இருப்பவர் ரோபோ சங்கர். திருவிழாக்களில் ரோபோ போன்று நடனமாடி ரோபோ சங்கர் என பெயர் பெற்ற இவர் காமெடியனாக நடித்து வெளியான "வேலைனு வந்துட்டா வெள்ளக்கார" திரைப்படத்தில் உள்ள "அன்னைக்கு காலேல 6 மணி இருக்கும்" என்ற காமெடி இன்றளவிலும் பேசப்படும் ஒன்றாகும். இந்த நிலையிலேயே இவரது மகளின் திருமணமானது தமிழ்நாட்டில் மிகவும் ட்ரெண்டிங் ஆக உள்ளது.


ரோபோ சங்கரின் மகளும் பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவருமே  இந்திராஜா ஆவர். இவரது திருமணமானது சமீபத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்று முடிந்து தற்போது ரிசப்சனும் முடிந்துள்ளது. இதற்கு கமல் , சூரி , விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த நிகழ்வுக்கு வந்தவர்கள் பற்றி ரோபோ சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அவர் கூறுகையில் " வருகை தந்த அனைவர்க்கும் நன்றி , நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி இருக்கும் என்று திருவிழா போன்று இருந்தது, நான் சினிமாவில் பணத்தை விட உங்கள் அன்பை அதிகமாக சேர்த்துள்ளேன்,நாங்கள் எதிர்பார்த்தது 3000 பேர் ஆனால் வருகை தந்தது 9000 பேருக்கு மேல் " என உருக்கமாக கூறியதுடன். குறித்த ரிசப்ஷனுக்கு மாத்திரமே கிட்டத்தட்ட 1.30 கோடி செலவாகி இருக்கலாம் என பல ஈவென்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனங்களும் கூறி வருகின்றது. இதன் செலவுகள் பற்றி ரோபோ சங்கர் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement