ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தீப்பந்தம்’. இந்த திரைப்படம், ஈழத்தமிழர் வாழ்வியல், போராட்டங்கள் மற்றும் சமூகச் சிறப்புகளை உணர்வூட்டும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், வரும் ஜூன் 11ம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு, சாலிகிராமம் பிரசாத் லேப் இல் உள்ள பிரிவியூ அரங்கில் விசேஷமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஈழத்தமிழர் வரலாறு திரைப்படமாக சொல்லப்படும் இந்த முயற்சிக்கு பெருமளவான மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. சமூக விழிப்புணர்வுடன் கூடிய இந்த முயற்சியை முன்னேற்ற திரையரங்கில் கலந்து கொண்டு உறுதுணையாக இருக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Listen News!