கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது . இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்திற்கான பாகம் 2 ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராக்கி வரும் நிலையில் பல பிரச்சனைகளுக்குநடைபெற்று வருகின்றது. தற்போது படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தில் வேலை செய்ப்பவர்கள் என மூவர் தொடர்ந்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்க பட்டிருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்க பட்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நீந்தி கரைக்கு வந்து உயிர் பிழைத்துள்ளார்கள். இத் தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!