தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் தமிழில் கடைசியாக ‘பிரதர்’ படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் பிரியங்காவின் அழகு மற்றும் நடிப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது.
தற்போது தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்துவரும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பாரம்பரிய லுக்கில் ஸ்டைலிஷ் பார்வையால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாரம்பரிய உடையிலும் பிரியங்காவின் கிறுக்கல் ஸ்மைல் மற்றும் எளிமையான ஸ்டைல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள், “கண்ணுக்கே தேன் பார்வை” என புகழ்ந்து வருகின்றனர். அவரது அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!