அமரன் திரைப்பட வெற்றியின் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனிற்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. ஏ ஆர் முருகதாஸின் மதராசி திரைப்படம் முடிவுக்கு வந்தாலும் சுதா கெங்காரவின் "பராசக்தி " படம் பண மோசடி விவகாரத்தினால் தள்ளி போயுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் டான் பட இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தியுடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. இப்போது இந்த படமும் இவரது கைநழுவி போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு Sk ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பல படங்கள் இல்லாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இயக்குநர் மற்றும் sk சம வயதுடையவர்கள் என்பதால் நட்பு கொஞ்சம் அதிகமாகியதால் அவரது எல்லா விடயங்களிலும் சிவா மூக்கை நுழைப்பதாகவும் அவர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் இயக்குநர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!