• Jun 19 2025

இரண்டு பேரும் ஜீரோ பேலன்ஸ்...!ரகுவரன் பற்றி நேர்காணலில் மனம் திறந்த பப்லு பிருத்விராஜ்..!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகவும்  சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ரகுவரன். ஹீரோவாக வேண்டுமென்ற கனவோடு சினிமாத்துறைக்கு வந்த இவர் வில்லனாக நடித்து  ஜொலித்தார். மேலும் பல திரைப்படங்களில் தன்னுடைய  நடிப்பை வெளிப்படுத்திய இவர் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்தார். இவர்களுக்கு  ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவரன் பற்றி நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்திய பேட்டியில்  கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகின்றது. 

தனது கடின உழைப்பின் மூலம் தற்போது மிக சிறந்த வில்லன் என்றாலே ரகுவரன் தான் ஞாபகம் வரும் இந்திலையில் இவரது இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில்  உயரமும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ்,  மிரட்டலான குரல் மற்றும் நடிப்பும் தான் நினைவுக்கு வருகின்றது .  மேலும் இவர் திரையில் வந்தாலே பார்க்கும் ரசிகர்கள் பயந்து போகும் அளவுக்கு அவரது நடிப்பு வில்லத்தனமானதாகவும்  வித்தியாசமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து இருப்பர். 

தற்போது நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ரகுவரன் பற்றிக்கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.அதாவது "ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டில்யூட்டில் சீனியர். அங்குதான் எங்களுடைய நட்ப்பு ஆரம்பித்ததாக கூறியிருந்தார் .மேலும் நாங்க இரண்டு பெரும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருப்போம். அவர் என்னை விட உயரமாக  இருப்பர் ஆனால் கலர் ,அணுகு முறை ,ஸ்டைல் எல்லாம் ஒரேமாதிரித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். 


மேலும் கூறும் போது எங்களுடைய கேர்ள் ஃபிரண்டும் அவருடைய கேர்ள் ஃபிரண்டும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் அதோடு அவர்கள் இருவரும் பயங்கரமான பணக்காரர்கள். நாங்க இரண்டு பேரும் பயங்கரமான ஜீரோ பேலன்ஸ் ஆளுங்க என்று கூறியுள்ளார். மேலும் இவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.



Advertisement

Advertisement