தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்களை பலர் தமது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் விமர்சகர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பாலாஜி பிரபு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல விடயங்களை கூறியுள்ளார் .
இந்த நிலையில் சுமாரானா திரைப்படத்தை நல்ல திரைப்படமாக சித்தரித்து வியாபாரம் பண்ணி விட்டார்கள் என்றும் நல்ல திரைப்படத்தை தாக்கி பேசுகின்றத்திற்கும் குரூப் இருக்கு என்று கூறப்படுகின்றது. இந்த இரண்டு விடயத்தையும் நீங்க எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "நல்ல திரைப்படங்களை அதற்கான விளம்பரத்தை அதுவே தேடி கொள்ளும் என்றும் மேலும் மக்களுக்கு அந்த திரைப்படத்தினை பார்த்து பிடித்து விட்டால் எப்படி அந்த திரைப்படத்தை தாக்கி பேசினாலும் அந்த திரைப்படம் வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு பொய்யானா புரொமோஷன் பண்ணி இருக்கின்றார்கள் அதாவது கிட்டதட்ட 400 பேர் கொண்டு அந்த புரொமோஷன் நடைபெற்றது. இந்த நிலையில் அங்கு வந்தவர்களுக்கு பணம் கொடுக்க பட்டிருந்ததாகவும் கூறினார். மேலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் தக் லைஃப் திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்து இருப்பார்கள் ஏன் இந்த படம் வெற்றி பெறவில்லை? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார் . மேலும் " டூரிஸ்ட் ஃபேமிலி " திரைப்படம் எந்த புரொமோஷனும் நடைபெறவில்லை ஆனால் அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. ஏன் என்றால் மக்களிற்கு திரைப்படம் பிடித்து விட்டது என்றால் யாராலயும் பொய்யாக புரொமோஷன் செய்து திரைப்படம் வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்தி விட முடியாது என்று கூறினார்.
மேலும் மக்கள் யார் ஒரு திரைப்படத்தை நன்றாக விமர்சனம் செய்கின்றார்கள் என்று அவர்கள் தெரிந்து கொண்டு திரைப்படங்களை பார்கின்றார்கள் என்று கூறினர் . மேலும் ஒரு படத்தினை பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்று கூறினால் ஏற்றுகொள்ள முடிந்த உங்களால் நன்றாக இல்லையென்று கூறினால் ஏற்று கொள்ள முடியாத என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.மேலும் ஒரு திரைப்படத்தை வாங்க வரும் தயாரிப்பளர்கள் படத்தினை பார்த்து விட்டு முதலில் நன்றாக இல்லையென்று கூறுவார்கள் பின்பு அவர்களே குறைந்த விலைகொடுத்தும் அந்த திரைப்படத்தை வாங்கி திரையில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள் என்று கூறினார்.
மேலும் விமர்சகர் எனக்கு திரைப்படம் பிடித்திருந்தால் அந்த திரைப்படத்தினை விமர்சனம் பண்ணுகின்றார் என்று கூறினார். அதற்கு நிகழ்ச்சி தொகுப்பளார் நீங்கள் சினிமா விமர்சகர் அல்லது உங்களுடைய விமர்சகர்? என்ற கேள்விக்கு "எல்லா திரைப்படங்களையும் விமர்சனம் பண்ண முடியாது ஏன் என்றால் எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கு அதற்கு ஏற்றது போல தான் விமர்சனத்திற்கான படத்தினை தெரிவு செய்து விமர்சனம் பண்ண முடியும்" என்று கூறியுள்ளார் . இந்த நேர்காணல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!