சாதாரண நடிகராக தனது அண்ணா இயக்கும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக மாத்திரமின்றி இயக்குநராக தயாரிப்பாளராக வலம் வருகின்றார். சமீபத்தில் இவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பவர் பாண்டி ,neek ,ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை எனும் படம் தயாராகி வருகின்றது. இந்த படம் தான் அடுத்து வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் பாரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தற்போது தனுஷ், ராஷ்மிகா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் குபேரா திரைப்படம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் முதலாவது சிங்கிள் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதுடன் மேலும் இரண்டு சிங்கிள்கள் அடுத்தடுத்து 10 நாளுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து பான் இந்தியா அளவில் படம் ரிலீஸாக உள்ளதுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவினை நடாத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!