• Oct 26 2024

எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது... டீப்ஃபேக் வீடியோ குறித்து டுவிட்டரில் கவலையுடன் பதிவிட்ட நடிகை ராஷ்மிகா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா அவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பை சம்பாரித்து வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஷ்மிகா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.   


நடிகை நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக். இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. 


அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது. டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள். இது டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். 


இந்த வீடிவோவை கண்டித்து நடிகை இவ்வாறு பதிவிட்டுள்ளார். "இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் ஆழமான வீடியோவைப் பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று நேர்மையாக, எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது.


இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகனாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்பாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை ஒரு சமூகமாகவும் அவசரமாகவும் நாம் கவனிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Advertisement