• Apr 17 2026

தமிழக அரசின் பாராட்டு விழாவிற்கு நன்றி தெரிவித்த இளையராஜா...!வைரலாகும் பதிவு...!

Roshika / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு அரசின் சார்பில் இசைத்துறையின் ஜாம்பவானான இளையராஜாவிற்கு சமீபத்தில் பெரும் பாராட்டு விழா சென்னை மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முதலவர் மு.க. ஸ்டாலின், இசைமாமன்னரின் சாதனைகளை புகழ்ந்து பேசினார்.


இந்த நிகழ்வுக்குப் பிறகு தனது அதிகாரபூர்வ அறிக்கையில் இசைஇளவரசர் இளையராஜா தெரிவித்தார்: "தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றி."

மேலும், விழாவில் கலந்து கொண்டு தன்னுடன் நேரில் வாழ்த்துக்களை பகிர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அவர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தங்களது அன்பும் ஆதரவையும் காட்டிய பொதுமக்களுக்கு, ரசிகர்களுக்கும் இளையராஜா தனது மனம்கனிந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.


இந்த விழா, தமிழ் கலாச்சாரம் மற்றும் இசை பாரம்பரியத்திற்கு ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. தமிழ் அரசு மேற்கொண்ட இந்த முயற்சி, தமிழ்த் தலைசிறந்த கலைஞர்களை நினைவுகூரும் பணியில் ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement