விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஒளிபரப்பான பொன்னி ஹீரோவாக நடித்து வந்தவர் சபரி . இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் சபரிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு மருத்துவமனை இருப்பது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொன்னி சீரியால் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சபரி. இவர் பல நிகழ்ச்சிகளையும் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும் சமீப காலத்தில் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியாகாதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இந்த நிலையில் ஜூன் 7 திகதி பொன்னி சீரியல் நிறைவடைந்து நிலையில் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.
தற்போது சபரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் மருத்துவமனையில் இருப்பது போன்றும் மேலும் அவர் விரைவில் திரும்பி வருவேன் உங்கள் பிரார்த்தனைகள் எனக்கு தேவை என்பது போன்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய கால்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதோடு உடம்பிலும் சில இடங்களில் கட்டு போடப்பட்டு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!