தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் " டூரிஸ்ட் ஃபேமிலி ".இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தயிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.இந்த படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி சாதனை படைத்து இருந்த்தது . தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
அபிசன் ஜீவிந்த் வேறு எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் தனது முதல் திரைப்படத்தினை வெற்றிகரமாக இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் வசூல் சாதனையும் படைத்தது பெரிதும் பாராட்ட கூடிய விடயமாக ரசிகர்களாலும் சினிமா பிரபலங்களாலும் பார்க்கபடுகின்றது.இந்த படத்தில் சசிகுமார்மற்றும் சிம்ரன் ,மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்
தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் .அந்த பதிவில் " நான் முகமூடி அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அண்ணா திடீரென்று யூடியூப்பில் "முகை மழை" பாடலைப் போட்டார். அதற்கு அவர்களிடம் நான் இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்டதற்கு அவர் இந்த மூன்று முறை பார்த்தேன்" என்று கூறினார்.
மேலும் "நான் படத்தின் இயக்குனர் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார் என்றும் உங்கள் சிறிய பங்களிப்பின் காரணமாக ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது அந்த மகிழ்ச்சியை உண்மையிலேயே அளவிட முடியாதது என்று தனது பதிவில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!