கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் ஸ்ரீ வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ,மாநகரம் ,இறுக்கப்பற்று போன்ற நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் இப்போது மன நிலை சரியில்லாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது தனியாக ஒரு அறையில் வாழ்ந்து வருவதாகவும் ஒரு வருடமாக பூட்டிய அறையில் அவருக்கு தேவையானதை அவரே சமைத்து போட்ட துணியை போட்டு இன்ஸ்டா போஸ்ட் போட்டு வருகின்றார். மேலும் இவரது இன்ஸ்டா கமெண்ட்களில் இவர் போதைக்கு அடிமையாகியுள்ளதால் தான் இவ்வாறு இருக்கின்றார் என்றும் லோகேஷ் கனகராஜ் ,சந்திப் கிஷன் ,மிஸ்கின் போன்ற இவருடன் பணியாற்றியவர்களை இவருக்கு உதவி செய்யுமாறு கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
மேலும் ஸ்ரீ எனக்கு லேடி போய்ஸ் கமெண்ட் பண்ணுங்க பேசலாம்னும் கமெண்ட் செய்து வருகின்றார். இதை பார்த்த பலரும் இவர் தனிமையில் இருந்து ஓரின சேர்க்கை உடைய ஒருவராக மாறி வருவதாக கமெண்ட் செய்துள்ளனர்.
இவர்களது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர் நடித்த பல படங்களில் நடித்ததன் பின்னர் பலர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதால் இவர் இந்த நிலைமைக்கு அழகியதாகவும் இவர் குடும்பத்தை விட்டு டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தற்போது அனைவரதும் நம்பர்களையும் பிளாக் செய்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இவரது குடும்பத்தினர் குணப்படுத்துவதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதுவரை எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Listen News!