தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜய் இவர் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். மேலும் "ஜனநாயகன்" திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் தற்போது அரசியல் பணியில் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் "தமிழக வெற்றி கழகமும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்து இதற்கு அக்கட்சியில் பொது செயலாளர் பதில் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் இருந்து விலகி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர். அதாவது மக்களை சந்தித்தது பேசுவது மற்றும் கட்சி கூட்டங்களை நடத்தி முழு அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வருகின்றார். தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயுடன் கூட்டணி அமைக்குமா ! என்ற கேள்வி எழுந்துள்ளது அதற்கு பதில் அளித்த பிரேமலதா அதாவது "விஜய் எங்கள் வீட்டு பிள்ளை " என்று பதில் அளித்துள்ளார். இத் தகவல் சமூக வலைத்தகளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!