தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம் நடன இயக்குநர் சங்கத் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த 'லியோ' படத்தின் தயாரிப்பில் நடன வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 லட்சம் நிதியை தன்வசமாக பயன்படுத்தியதாக சங்க உறுப்பினர் அபர்ணா ஊடகங்களிற்கு பேட்டி வழங்கியுள்ளார். மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தனக்கு சார்பானவர்களுக்கு சட்டத்தை மீறி செயற்பட அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொழில்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சிலர் கனடிய நடன கலைஞரை தாக்கியதாகவும் தினேஷ் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி, 'லியோ' படத்தில் பணம் செலுத்தப்படாதது குறித்த புகார்களை மறுத்துள்ளார். அவரின் விளக்கத்தில், 2,000 நடனக் கலைஞர்கள் தேவைப்பட்ட நிலையில் 600 பேர் சங்க உறுப்பினர்களாக இருந்தனர். மீதமுள்ள 1,400 பேர் வெளியுறுப்பினர்களாக இருந்தனர். அனைவருக்கும் சம்பளம் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாகவும் ரூ. 94.60 லட்சம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!