தமிழ் சினிமாவில் முன்னணிநகைச்சுவைநடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் சில காலம் நடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் Youtube சேனல்களில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கபட்டுள்ளது .
இந்த நிலையில் வடிவேலு தன்னை பற்றி இனி அவதூறாக பேச கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நிதி மன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.இந்த நிலையில் வழக்கினை சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணனையை மாஸ்டர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி, சாட்சியங்களை சமர்ப்பித்தார் நடிகர் வடிவேலு.
இந்த நிலையில் இன்று விசாரணை முடிவுற்று இருந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது அதாவது "சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து " தீர்ப்பு வழங்கபட்டிருந்தது. இத் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் வடிவேலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சிங்க முத்துவுக்கு எதிராக மாறியதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!