• Oct 26 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சொன்னதை மறந்த நிக்சன்- யாரை சந்தித்திருக்கிறார் தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 


90 நாட்களை கடந்து பைனலை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நகர்ந்து வருகிறது. இன்னும் இரு வாரத்தில் பைனல் நடைபெற உள்ளதால் யார் வெல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்ற விஷ்ணு, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.


4மேலும் இந்த நிகழ்ச்சியிலுரந்து கடந்த வாரம் ரவீனாவும் நிக்சனும் எலிமினேட் ஆகி வெளியேறினார்கள்.பிக் பாஸில் இருந்து வெளியேறியபின் நிக்சன் முதல் வேலையாக மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார் ஜோவிகா, சரவண விக்ரம் ஆகியோரை அவர் சந்தித்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது


அதே நேரத்தில் வினுஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என நிக்சன் மறந்துவிட்டார என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.விரைவில் வினுஷாவை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.



Advertisement