• Oct 26 2024

ராதிகா முன்னாடி பாக்கியாவுக்கு நம்பிக்கை கொடுத்த கோபி- கதறி அழும் இனியா, குழப்பத்தில் ராமமூர்த்தி- Baakiyalakshmi Serial

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரில் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தா இருந்து அழுது கொண்டிருக்க ராதிகா கவலைப்படாத எல்லாம் சரி ஆகிடும் என்று ஆறுதல்ப்படுத்துகின்றார். தொடர்ந்து அந்த நேரம் இனியாவும் வந்து அழுகின்றார். ஜெனி அக்காவும் இனிமேல் வரமாட்டாங்க, நீங்களும் இங்க இருந்து போனால் நான் என்ன அக்கா பண்ணுறது என்று கலங்கி அழுகின்றார்.


அப்போது ராதிகா இருவரையும் சமாதானம் செய்கின்றார். தொடர்ந்து அங்கு எழில் வர ராதிகாவுமு் இனியாவும் வெளியில் போகின்றனர். அப்போது அமிர்தா எழிலிடம் மன்னிப்புக் கேட்டு அழுகின்றார். அத்தோடு ஏற்கனவே குடும்பம் உடைஞ்சு போய் நிற்குது, என்னால இன்னொரு பிரச்சினையா என்று சொல்லி அழுகின்றார்.

இதனால் எழில் அமிர்தாவை ஆறுதல்ப்படுத்துகின்றார்.மறுபுறம் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்க, பாக்கியா இருவருக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கின்றார்.அத்தோடு தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, கடைசியில் இருவருடைய வாழ்க்கையும் இப்பிடிப் போச்சே என்கின்றார்.


தொடர்ந்து ராதிகாவும் கோபியும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா இன்டைக்கு நீங்க நடந்து கிட்ட விதம் தான் சரி,என்று பெருமையாக பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் பாக்கிா கோபிக்கு நன்றி சொல்கின்றார். அதற்கு கோபி கவலைப்படாத பாக்கியா ஒன்றும் நடக்காது,அமிர்தாவும் எழிலும் சேர்ந்து வாழத்தான் போறாங்க என்று சமாதானப்படுத்தி அனுப்புகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement