• Jul 11 2025

தன்னம்பிக்கையின் உருக்கம் நேர்காணலில் மனம் திறந்த விக்னேஷ்..!ரசிகர்களை நெகிழ வைத்த பதிவு.!

Roshika / 11 hours ago

Advertisement

Listen News!

திரைப்பயணத்தை ஆரம்பித்த  இளம் நடிகர் தனது உணர்ச்சி ‌பூர்வமான  நேர்காணலில் காக்கா முட்டை விக்னேஷ் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . அதாவது அவர் கூறும் போது சொந்த ஊரின் பெருமையும், அரசியலற்ற தணிக்கும் குழப்பங்களையும் வெளிப்படுத்தி விட்டார். “நான் அந்த ஏரியாவ மாத்திக்கிற ஆள் கிடையாது. அது தான் என் அடையாளம்,” என்றார் இவர். இன்று அவர் சொன்னதாவது, காசி மேட்ல இருந்து வந்தவன் எப்போதும் தனது வேர்களை மறக்க மாட்டான் என்ற உறுதியையும் வெளிக்கொடுப்பதாகும்.


மேலும்  சினிமாவில் தொடங்கிய பயணத்தின் முதல் வாய்ப்பு, எப்படி நம்பிக்கை இழந்த நிலையில் அணலரசு மாஸ்டர் மீண்டும் நம்பிக்கை கொடுத்தார், சமுத்திரக்கணி சார் அவரை எப்படி மனதார வழிநடத்தினார் என்பவை எல்லாம் உணர்வுபூர்வமான குறிப்புகள்.


சினிமாவில் இப்போது பரப்பாக பேசப்படும் நெப்போட்டிசம், பபுள் கம் போன்ற விஷயங்களை நேர்மையாக பேசுகிறார். “நான் பபுள் கம் போட்டேன்” என்பதை மிக நேர்மையுடன் பகிர்கிறார். இது பதற்றத்தைக் குறைக்கும் ஒரு பழக்கம்தான் என்கிறார். இதை மறைக்காமலே சொல்லும் இந்த உண்மை தன்மையே அவரை தனிமைப்படுத்துகிறது.


அவரைப் பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் போது, அது அவருடைய அடுத்தகட்ட சிந்தனைதிறனை வெளிக்கொணர்கிறது. ஒரு ரோல்-மாடலை வைத்துக்கொண்டு அதை தன் சினிமா பயணத்துக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்வது தனக்கே உரிய பாணி. என்று கூறியிருந்தார். 


தனது அப்பா உயிருடன் இருந்திருந்தால் இன்னும் சுமூகமா இருக்கலாம் என்ற ஏக்கம், சினிமாவில் தன் வெற்றியை பெற்றபின் கூட அந்த நிமிடத்தில் உணரவில்லை என்ற உண்மை... இது அவருடைய வாழ்க்கையின் நிஜத்தை உணர்த்துகிறது.

இந்த பேட்டி அவரது குரலை, அனுபவத்தை, மனம் காய்ந்த நாட்களையும், தன்னம்பிக்கையையும் நேர்மையாக வெளிக்கொணருகிறது. இது ஒரு நடிகரின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்கிறது  எவ்வளவு உழைத்தாலும், தன்மையின்மையும் எதிர்பார்ப்பும் இருக்கக்கூடும் ஆனால் தன்னம்பிக்கையோடு வழி தொடரும்  என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement