• Apr 18 2026

கம்பேக் கொடுக்க காரணம் இதுதான்.. நடிகர் அப்பாஸின் மனம் திறந்த பேச்சு வைரல்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகராக விளங்கிய அப்பாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் ' ஹாப்பி ராஜ்' திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் திரைக்கு திரும்புவது, அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு தருணமாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், நடிகர் அப்பாஸ் தனது கம்பேக் குறித்து பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போதைய சூழ்நிலையைப் பற்றி பேசும்போது, “இப்போதைய சூழலில் எங்கும் எதிர்மறையான விஷயங்களே அதிகமாக உள்ளன. ஆனால் இந்தத் திரைப்படத்தின் கதையை கேட்ட போது எனக்குள் ஒரு பாசிடிவ் அதிர்வு ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் வயிறு குலுங்க சிரித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியே செல்வார்கள்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அப்பாஸ் அளித்த இந்த நேர்மையான கருத்துக்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சிரிப்பையும் மகிழ்ச்சியையும் மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் திரைப்படம் என்ற தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த கம்பேக் படமாக உருவாகி வரும் ஹாப்பி ராஜ் திரைப்படத்தில், இன்றைய தலைமுறை முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் மேலும் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர உள்ளார்.

Advertisement

Advertisement