தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்திரன், தனது புதிய இசை ஆல்பம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த ஆல்பமான "அரவிந்த்" பாடல் இன்று (ஜூன் 14) மாலை வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கம். திரைப்பட பாடல்களைத் தாண்டி தனிப்பட்ட இசை ஆல்பங்கள் மூலமும் அவர் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், "அரவிந்த்" ஆல்பத்தின் முதல் பாடல் வெளியாகும் தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இந்த பாடல் வெளியான உடனே யூடியூப் மற்றும் இசை தளங்களில் புதிய சாதனைகளை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனிருத்தின் இசைப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக "அரவிந்த்" ஆல்பம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் பாடல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Listen News!