• Oct 26 2024

சுந்தரி சீரியல் நடிகை சட்டப்பூர்வமாக கணவரை பிரிந்தாரா? திடுக்கிடும் காரணம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தற்போது மிகவும் பிரபலமான நடிகைகளுள்  ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை கேப்ரில்லா செல்லஸ். இவர் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் அழகுக்கு எந்த ஒரு குறையும் இல்லாதவராக காணப்படுகின்றார். இவரது முகத்தில் ஏதோ ஒரு கலை குடி கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் யூடியூப், டிக் டாக் ஆகிய ஆப் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். இவர் அதில் கலை துறையை நேசிக்கும் விதமும் தனது நடிப்பை வெளிகாட்டும் விதமும் பல ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது. தனது உடல் நிறம் தொடர்பாக எழும்  விமர்சனங்கள் அத்தனையையும் தாண்டி இன்று சாதித்த ஒரு பெண்ணாக பலருக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றார்.

நயன்தாரா நடித்த ஐரா படத்தில் கேப்ரில்லா நடித்துள்ளார். அதன் பின்பு சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடிப்பதோடு இந்த சீரியல் முதலாவது பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகை கேப்ரில்லா தனது கணவரை பிரிந்ததாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை கேப்ரில்லா சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் இதுதான் அவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இது தொடர்பில் அவர் வழங்கிய பேட்டி ஒன்றில், அவருக்கு சீரியல் நடிப்பது பிடிக்கவில்லை. ஆனால் அம்மாவுக்கு பிடிக்கும் என்பதால் நான் அவரிடம் பேசி ஓகே வாங்கி விட்டேன் எனக் கூறியுள்ளார். 

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலும் இது தொடர்பில் எந்த ஒரு இடத்திலும் அதிகாரபூர்வமான தகவலை நடிகை கேப்ரில்லா கூறவில்லை. இதனால் இது வதந்தியாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement