தமிழ் சினிமாவின் முன்னணி வாரிசு நடிகரான கார்த்தி "மெய்யழகன் " படத்திற்கு பின்னர் "டானாக்காரன்" பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் அடுத்த படத்தில் பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் வீடுகள் பிரமாண்ட செட்டுகளாக போடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் வீடுகளை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறலாம் என்பதன் காரணமாக படக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கார்த்திக்கு இந்த படம் பெரிய ஒரு வரவேற்பினை வழங்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. படப்பிடிப்பு வேலைகள் மிகவும் மும்மரமாக இருப்பதனால் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கார்த்தி நடித்து முடித்துள்ள "வா வாத்தியாரே " திரைப்படமும் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!