• Jun 07 2025

கடலை மிட்டாய் வியாபாரம் தொடங்கிய ’மெட்டி ஒலி’ சீரியல் நடிகர்.. பிசினஸ் படு ஜோராம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

’மெட்டி ஒலி ’ உட்பட சில சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவகுமார் என்பவர் தற்போது சென்னையில் கடலை மிட்டாய் வியாபாரம் தொடங்கி இருப்பதாகவும் அவருக்கு பிசினஸ் ஜோராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

‘மெட்டி ஒலி’ ‘கோலங்கள்’ ’கண்மணி’ உள்பட ஒரு சீரியல்களில் நடித்தவர் சிவகுமார் என்பதும் குறிப்பாக ’மெட்டி ஒலி’ சீரியலில் லீலாவுடன் வேலை செய்பவராக நடித்த அவரது  நடிப்பு சூப்பராக இருக்கும் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சீரியல் மூலம் பிரபலமான சிவகுமார், சினிமா வாய்ப்புகளையும் பெற்றார் குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த ’சூது கவ்வும்’ அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ விஜய் நடித்த ’புலி’ உட்பட சில படங்களில் நடித்தார். தற்போதும் அவர் சினிமா, சீரியல் ஆகிய இரண்டிலும் பிஸியாக இருக்கிறார்.



இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் புதிதாக கடலை மிட்டாய் வியாபாரத்தை சிவகுமார் தொடங்கி இருப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரது கடைக்கு அமோக ஆதரவு தந்து கொண்டிருப்பதால் பிசினஸ் அபாரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சினிமா, சீரியலுக்கு வருவதற்கு முன்பே அவர் சினிமா தியேட்டரில் கேன்டீன் நடத்தி வந்தார் என்பதும் அந்த அனுபவத்தின் மூலம் தான் தற்போது அவர் கடலை மிட்டாய் பிசினஸ் ஆரம்பித்துள்ள நிலையில் பிசினஸ் சிறப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமா, சீரியல், பிசினஸ் என படு பிஸியாக இருக்கிறார் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement